கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்: தா. பாண்டியன்

இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை வரவேற்கிறோம். அறிவி்க்கப்பட்டுள்ள ரூ.500 கோடி மதிப்புள்ள திட்டத்தை பட்ஜெட் அறிவிப்பில் சேர்க்க வேண்டும். போராட்டகாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நிலவி வரும் கடும் மின் தட்டுப்பாடு தீரும் வரை கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தும்.
போராட்டக்காரர்கள் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளுடன் பேசி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தமிழகத்தின் பிற பகுதியில் இருப்பவர்களின் நலனை தடுக்கும் வகையில் கூடங்குளத்தில் உள்ளவர்கள் செயல்பட வேண்டாம்.
மத்திய அரசு வரவு-செலவுக் கணக்கை சமர்பித்த மறுநாளே ரயில்வே துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். மத்திய அரசு கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. வரிகொள்கையைப் பொறுத்த வரை பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.30,000 கோடி திரட்டும் முயற்சியை கைவிட வேண்டும். மறைமுக வரியாக ரூ.48,000 கோடி விதித்திருப்பதும். மானியத்தைக் குறைப்பதும் மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
125 போர் விமானங்கள் வாங்கும் முடிவு அரசின் அகம்பாவத்தை காட்டுகிறது. பட்ஜெட்டில் விவசாயத்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீரழித்து வருகிறது. இது குறித்து பாட்னாவில் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications