மனித உரிமை பத்தித் தெரியனுமா, ராஜபக்சே சொல்வதை கேட்டுட்டுப் போங்க!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ராஜபக்சே சொல்லியுள்ளதாவது...
பௌத்த மற்றும் ஏனைய மதங்களினால் போஷிக்கப்பட்டு வரும் இலங்கையர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக எவரும் தனியாக பாடம் நடத்த வேண்டியதில்லை.
30 ஆண்டுகால போரை முடித்து மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அவசியமில்லை.
நாட்டுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும். 2500 ஆண்டுகள் பௌத்த மற்றும் ஏனைய மத வரலாற்றைக் கொண்ட இந்த நாட்டு மக்களுக்கு மனித உரிமை குறித்து சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பேசாமல் இனிமேல் அத்தனை பேரும் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே போன்றோரிடம் மனித உரிமைகள் என்றால் என்ன என்று டியூஷன் எடுத்துக் கொள்ளலாம் போல...












Click it and Unblock the Notifications