ஊழலால் அந்நிய முதலீடு வருவது தடைபடுகிறதா? - மன்மோகன் சிங் விளக்கம்

அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் கொரியாவுக்குப் பயணமாகியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதுதான் இந்தியாவின் நோக்கம்," என்றார்.
அவரிடம், ஒருவேளை சீனாவா அமெரிக்காவா என்ற கேள்வி எழுந்தால் இந்தியாவின் நிலை என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு, "சீனா எங்கள் பக்கத்து நாடு. இருநாட்டுக்கும் இடையே பெரிய எல்லை உள்ளது. வர்த்தகத்தில் இந்தியாவின் பெரிய பார்ட்னர்.
அமெரிக்காவுடன் 2005- சிவில் அணு ஒப்பந்தத்துக்குப் பின் மிக இணக்கமான உறவு நிலவுகிறது. 3 மில்லியன் இந்தியர்கள் அங்கே வசிக்கிறார்கள். இந்தியாவின் பெரிய வர்த்தக கூட்டாளியும் கூட.
எனவே இரு நாட்டு நட்பும் எங்களுக்கு தேவை. அந்த நட்புறவைப் பாதுகாக்கவே விரும்புகிறோம்," என்றார்.
இந்தியாவின் ஊழல் - சிவப்பு நாடா
இந்தியாவின் ஊழலும், சிவப்பு நாடா (அதிகாரிகள் ராஜ்ஜியம்) முறையும் அந்நிய முதலீட்டுக்கு பெரும் எதிரியாக உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருப்பது குறித்து மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "இது தவறு. இப்படியொரு கருத்தை சில சக்திகள் பரப்பி வருகின்றன. இந்தியா அந்நிய முதலீட்டுக்கு பெரும் இடம் கொடுத்துள்ளது. முன்பிருந்ததை விட ஏராளமான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இந்தியா சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு. மக்களாட்சி முறையில் நிர்வாகம் நடக்கிறது. எனவே நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்க முடியும்," என்றார்.
வரும் ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு செலவழிக்கப்பட உள்ளதாகவும், தென் கொரிய நிறுவனங்களுக்கும் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications