11 புதிய சர்வதேச வழித்தடங்களில் பறக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

Air India
டெல்லி: தனியார் விமான சேவை நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று 11 புதிய சர்வதேச வழித்தடங்களில் பறக்க இந்திய விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நடப்பு ஆண்டில் தனியார் நிறுவனங்களும், பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியாவும் சர்வதேச சேவைகளை விரிவுபடுத்த தயாராகியுள்ளன.

ஒப்பந்தங்கள்

இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களின்படி சர்வதேச வழித்தடங்களில் சேவையளிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தனியார் நிறுவனங்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால் இதுவரை அரசு நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வந்தது.மத்திய அரசு தற்போது தனியார் விமான நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.

புதிய வழித்தடங்கள்

இதனால் மும்பை - டாரஸ் சலாம், டெல்லி - குவாங்சூ, டெல்லி-தாஷ்கண்ட், டெல்லி-ஹோசிமின் நகரம், டெல்லி-ஹனோய், டெல்லி-அலமாதி, டெல்லி - மெகாவோ, டெல்லி-ஆடிஸ்அபாபா, டெல்லி-மெல்போர்ன் மற்றும் டெல்லி - சிட்னி ஆகிய மார்க்கங்களில் இந்திய விமானங்கள் பறக்க உள்ளன.

விமானசேவை அதிகரிப்பு

இதனால் கோடை காலத்தில் ஏர் இந்தியா, அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களின் வாராந்திர சர்வதேச சேவைகளின் எண்ணிக்கை தற்போதைய 430 என்ற அளவிலிருந்து 471-ஆக உயர உள்ளது. இதே போன்று தனியார் நிறுவனங்களின் சர்வதேச சேவைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+