நிதிநிலை அறிவிப்புகளை நிறைவேற்ற கடினமான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ளும்: பிரணாப் முகர்ஜி

Subscribe to Oneindia Tamil

Pranabh Mukherjee
டெல்லி: நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் அறிவிப்புகளை நிறைவேற்ற, மத்திய அரசு வரும் மாதங்களில் கடினமான முடிவுகளை எடுக்கும்' என்று, நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து இருக்கிறோம். அறிவிப்புகளை அறிவித்து விட்டு, அவற்றை நிறைவேற்றாமல் இருந்து விட முடியாது. இவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, சில துறைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை நிறுத்த அல்லது குறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பல்வேறு பற்றாக்குறையை சரிகட்ட வேண்டிய நிலையிலும் இருக்கிறோம்.

வரும் மாதங்களில் மத்திய அரசு சில கடினமான முடிவுகளை எடுத்து, அதை நிறைவேற்ற வேண்டியது இருக்கிறது. இதை தவிர வேறு வழி கிடையாது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 125 டாலராக உயர்ந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர அதிக பட்ச வாய்ப்பு இருக்கிறது.

மேலும் நாட்டில் கடந்த 3 மாதங்களாக பண வீக்கமும் அதிகரித்து விட்டது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கிகளின் வட்டி விகிதங்கள் இன்னும் குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் தொழில்கள் வளர்ச்சி அடையும். சரியான திட்டமிடலும், செயல்படுத்தலும்தான், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொழில் அதிபர்களின் ஆதரவு முக்கியமானது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+