டெல்லியில் ஹசாரே உண்ணாவிரதம்- மணல் கடத்தியவர்களால் கொல்லப்பட்டவரின் தந்தை பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
திசையன்விளை: டெல்லியில் நடைபெறும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தில் திசையன்விளை அருகே மணல் கடத்தும் கும்பலால் கொல்லப்பட்டவரின் தந்தை பங்கேற்கிறார்.

திசையன்விளை அருகே மிட்டதார்குளம் நம்பியாற்றில் திருட்டுதனமாக மணல் கடத்திய லாரியை தடுத்த அதே ஊரை சேர்ந்த வின்சென்ட் எஸ்தர் என்பவர் மகன் சதீஷ்குமார் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பான லாரி ஓட்டுனர்கள் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் இன்று நடைபெறும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தில் மணல் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்ட சதிஷ்குமாரின் தந்தை வின்சென்ட் எஸ்தர் பங்கேற்கிறார். அவர் நேற்று பிற்பகல் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+