நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்- விஜயகாந்த்தை முடக்க ஆலோசனை?

நாளை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுகிறது. இதில் முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக தேமுதிகவினர் மற்றும் பிற எதிர்க்கட்சியினரின் வியூகங்களை உடைத்து எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
தேமுதிகவினர் முன்பு போல இல்லை. இப்போது நிஜமான எதிர்க்கட்சியாகி விட்டனர். அதிலும் சங்கரன்கோவிலில் தேமுதிகவிடம் சவால் விட்டு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது அதிமுக. எனவே வருகிற கூட்டத் தொடர் நாட்களில் சபையில் அனல் பறக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக சபாநாயகர் விதித்த தடை முடிந்த பின்னர் விஜயகாந்த் சபைக்கு வரும் நாட்களில் கடும் வெப்பம் நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்குவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications