பெண்ணிடம் நிலத்தை சுட்டதாக வழக்கில் சிக்கினார் சசி அண்ணன் மகன் மகாதேவன்!

Subscribe to Oneindia Tamil

Mahadevan
தஞ்சாவூர்: தஞ்சாவூரைச் சேர்ந்த விளார் கிராமத்தில் ஒரு பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடராஜன் மீதும் இதுதொடர்பாக வழக்குப் பாய்ந்துள்ளது.

தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் அமலா புஷ்பமேரி என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் விளார் பை- பாஸ் சாலையில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் இறந்தவர்களின் நினைவாக நினைவுத் தூண் கட்டப்படும் இடத்தின் அருகே தனக்கு சொந்தமான 2 கிரவுண்ட் நிலத்தை சசிகலா கணவர் எம்.நடராஜன், சசிகலாவின் அண்ணன் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் சிலர் அபகரித்ததாக கூறி இருந்தார்.

அதன்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் எம்.நடராஜன், டி.வி.மகாதேவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டி.வி.மகாதேவனை கைது செய்வதற்காக தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ்தங்கையா தலைமையில் போலீசார் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள டி.வி.மகாதேவனின் வீட்டிற்கு சென்றனர்.

ஆனால் அங்கு அவர் இல்லை. தொடர்ந்து போலீசார் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை போட்டனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே சசிகலா தரப்பைச் சேர்ந்த கணவர் நடராஜன், உறவினர் ராவணன், தம்பி திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் விரைவில் மகாதேவனும் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+