கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி ஆந்திர முதல்வருக்கு ஜெ. கடிதம்

கிரண்குமார் ரெட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
கடந்த 4-6-2011 அன்று தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தை தொடர்ந்து 23-6-2011 அன்று தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விட்டீர்கள், அதற்காக தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை நகரில் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் அதை நீங்கள் அறிவீர்கள். 24-3-2012 அன்று நிலவரப்படி கண்டலேறு அணையில் 37 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதனால் சென்னை நகர குடிநீர் தேவைக்காக, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதில், ஆந்திராவுக்கு எந்த சிரமும் ஏற்படாது.
ஆகவே, சென்னை நகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எஞ்சியுள்ள மாதத்துக்குரிய தண்ணீர் கிடைக்கும் வகையில், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications