பெப்சி நிறுவன தலைமை அதிகாரி இந்திரா நூயின் சம்பளம் 6 விழுக்காடு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

சென்னையில் பிறந்த இந்திரா நூயி, பெப்சிகோ நிறுவனத்தின் சர்வதேச தலைமை அதிகாரியாக இருக்கிறார். 2011ம் ஆண்டுக்கு நூயியின் சம்பளம் மற்றும் படிகள், பங்கு ஒதுக்கீடாக மொத்தம் ரூ87.2 கோடி பெற்றுள்ளார். அதில் அடிப்படை சம்பளம் ரூ8.16 கோடி.
இது 2006ம் ஆண்டு முதல் 2010 வரை ரூ6.6 கோடியாக இருந்தது. 2011ல் அவருக்கு சுமார் ரூ1.5 கோடி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. ரூ48.5 கோடிக்கு நூயி பெப்சி நிறுவன பங்கு ஒதுக்கீடு பெற்றுள்ளார். ஊக்கத் தொகையாக 2011ம் ஆண்டுக்கு ரூ12.5 கோடி தரப்பட்டுள்ளது. ஓய்வூதிய பலனாக 2011ல் ரூ15.3 கோடி தரப்பட்டது.
மொத்தம் சேர்த்து 2010ம் ஆண்டை விட 2011ல் இந்திரா நூயி சம்பளம் 5.8 விழுக்காடு அதிகரித்தது. 2011ம் ஆண்டில் பெப்சி நிறுவனம் நட்டம் அடைந்தும் நூயி சம்பளம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications