For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்த லஞ்சப் புகார் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

V K Singh
டெல்லி: ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தம்மை லஞ்சப் புகாரில் சிக்க வைக்க சதி நடந்ததாக தெரிவித்திருந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

தம்மை லஞ்சப் புகாரில் சிக்க வைக்க ரூ14 கோடியாக லஞ்சம் கொடுக்க சிலர் முன்வந்தனர் என்று நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் வி.கே.சிங் தெரிவித்திருந்தார்.

இன்று காலை அவை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கல் எழுப்பினர். அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

ஆனால் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த முற்பட்டதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளின் நடவடிக்கைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசு எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Defence Minister A K Antony has termed as "serious" Army chief V K Singh's claim that he was offered a bribe to clear the purchase of substandard vehicles.Wasting no time, Antony ordered a CBI probe into Gen Singh's allegation and said, “we will have to handle it.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X