பியாந்த்சிங் வழக்கு: ரஜோனாவின் தூக்கை நிறுத்த குடியரசுத் தலைவரிடம் மனு
சண்டிகர்: பியாந்த்சிங் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் கருணை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த்சிங் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரில் பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மார்ச் 31-ந் தேதி பாட்டியாலா சிறையில் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஆனால் சட்டப்படி பாட்டியாலா சிறையில் ரஜோனாவை தூக்கிலிட முடியாது என்று நீதிமன்றத்துக்கு சிறைக் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகால் தத்தும் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
மேலும் பஞ்சாப் முதல்வர் மற்றும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் கருணை மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் ரஜோனாவுக்காக ஆளுநர் சிவ்ராஜ் பாட்டீலிடம் கருணை மனு கொடுக்கப்பட்டு அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ரஜோனாவை தூக்கிலிடுவது சீக்கியர்களை உணர்வுகளை காயப்படுத்தும் செயல் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரஜோனாவின் தூக்கை ரத்து செய்யக் கோரி பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாளை மறுநாள் பஞ்சாப் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications