மூளைச் சலவை செய்து ரோபோ ஆக்கிவிட்டனர்: கசாப் கருணை மனு இன்று விசாரணை

26/11 மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு மும்பை நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இதையடுத்து கசாப் தனது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி உச்ச நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தான். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் கசாப் சார்பில் ஆஜராகி வாதாடி வருகின்றார். மும்பை தாக்குதல்கள் நடந்தபோது கசாப் சிறுவனாக இருந்தான். அவனது மத நம்பிக்கையை பயன்படுத்தி அவனை தவறான வழியில் கொண்டு சென்றுள்ளனர் என்று அவர் வாதாடினார்.
இந்நிலையில் அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கசாபின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனாக இருந்த தன்னை மதத்தின் பெயரைச் சொல்லி மூளைச் சலவை செய்து ரோபோ போன்று இயக்கி இந்த குற்றத்தைச் செய்ய வைத்தனர் என்று கசாப் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளான்.












Click it and Unblock the Notifications