தடயவியல் அறிக்கை வரும் வரை இத்தாலிய கப்பலை விடுவிக்க கேரள அரசு மறுப்பு
திருவனந்தபுரம்: 2 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் தடயவியல் அறிக்கை வரும் வரை இத்தாலிய கப்பலை விடுவிக்க முடியாது எனறு உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கொல்லம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி அந்த வழியாக வந்த இத்தாலிய நாட்டு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் சுட்டனர். இதில் தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ, ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தாலிய கப்பலான என்ரிகா லெக்ஸியும் கடந்த 17ம் தேதி முதல் கொச்சி துறைமுகத்தில்பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகளை கேரள போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்கு முன் கப்பல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.3.10 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் கப்பலை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்கும்படி கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிது. அதன்படி கேரள அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில் மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கி எது என கண்டறிய தடயவியல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் முடிவு கிடைக்காத வரை கப்பலை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தது.
இன்னும் ஓரிரு நாட்களில் தடயவியல் அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications