ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவியுங்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மிகவும் பழமையான மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான ராமர் சேது பாலத்தின் மீது கால்வாயின் 6வது பாதையை வெட்டும் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முறையீட்டு மனுக்களை 2007ம் ஆண்டில் தாக்கல் செய்தேன்.
அந்த மனுக்களில் ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது இறுதி உத்தரவுகளை வெளியிடும் வரையில் அதனை தேசிய புராதான சின்னமாகக் கருதி எந்த நிலையில் இருக்கிறதோ அதை அப்படியே தொடர்ந்து பாதுகாக்க தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்கும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்துக்கும் உத்தரவிட வேண்டுமெனவும், பாலத்தில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாதிருக்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைக்கும், சேது சமுத்திரம் கழகத்துக்கும் உத்தரவிட வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.
ராமர் பாலம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஆர்.கே.பச்சௌரி தலைமையிலான குழுவை மத்திய அரசு 2008ம் ஆண்டு அமைத்தது. அந்தக் குழு அறிக்கையின் சுருக்க விவரம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறைகளின் வல்லுநர் குழு ஆய்வு செய்து தனது கருத்துகளை கடிதத்தின் வாயிலாக கப்பல் போக்குவரத்துக்குத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிப்பது குறித்து கருத்துகளை வியாழக்கிழமையன்று தெரிவிக்குமாறு மத்திய அரசின் வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிப்பதில் எந்த தாமதமும் காட்டக் கூடாது. அது குறித்த தனது கருத்துகளை நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications