குற்றப் பின்னணி கொண்டவர்கள் இருக்கும் நாடாளுமன்றத்தை எப்படி மதிப்பது?: கெஜ்ரிவால்

நாடாளுமன்றத்தை அவமதித்ததாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ஒரு சில எம்பிக்களின் மீது மட்டும்தான் எனக்கு மதிப்பு உண்டு என்றும் அதில் கூறியுள்ளார்.
குற்றப்பின்னணி உடைய 162 எம்பிக்களை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதை அவமதிக்கச் செயததில் அனைத்துக் கட்சிகளுக்கும்தான் பொறுப்பு உள்ளதே தவிர தமக்கு அல்ல என்பதும் கெஜ்ரிவாலின் பதில்.
ரயில் விபத்து ஒன்று நடைபெற்ற போது லால்பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நாடாளுமன்றம் ஒன்று இருந்தது. அதுபோல ஒரு நாடாளுமன்றத்துக்கு தியாகம் செய்ய விரும்புகிறேன். ஆனால் இப்போதுள்ள நாடாளுமன்றத்தை எப்படி மதிக்க முடியும் என்கிறார் கெஜ்ரிவால்..
பொது சேவை என்றால் என்னவென்றே தெரியாத தொழிலதிபர்கள் பல்வேறு கட்சிகளின் உதவியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர் என்றும் தங்களின் வர்த்தக நலனுக்காக அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றனர். இது நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்துவது ஆகாதா? இது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகாதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications