அரசுக்கு எதிராக தகவல் பரப்பியதாக 16 இணையதளங்களை முடக்கியது சீனா- 6 பேர் கைது
பெய்ஜிங்: சீன அரசைக் கவிழ்க்க ராணுவம் முயற்சிக்கிறது என்று இணையதளத்தில் வதந்தியைப் பரப்பினர் என்ற குற்றசாட்டின் கீழ் 6 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 16 இணையதளங்களையும் சீனா முடக்கியுள்ளது.
meizhou.net, xn528.com. cndy.com.cn உள்ளிட்ட 16 இணையதளங்களில் "சீன தலைநகர் பெய்ஜிங்கில் ராணுவ வாகனங்கள் நுழைந்துவிட்டன... பெய்ஜிங்கில் ஏதோ நடக்கப் போகிறது" என்று வதந்தி பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இணையதளங்களும் இதன் உரிமையாளர்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர் என்பது சீனா அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு.
இவர்கள் ம்ட்டுமல்ல இன்னும் பலரும் இதே குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இணையதள பயன்பாட்டாளர்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் இணையதள வதந்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சீன அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications