ஏப்ரல் 19-ந் தேதி முதல் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல்
தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து கொழும்பு இடையே ஏப்ரல் 19ந் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுப்பையா கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுகம் நடப்பாண்டில் 281 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன்மாதம் 13ந் தேதி தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அது கடந்த நவம்பர் மாதம் 18ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
இதற்கு தொழில்நுட்ப கோளாறு மற்றும் எரிபொருள் காரணம் ஆகும். தற்போது இதனை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 19ந் தேதிமுதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 450 பேர் பயணிக்க முடியும். வாரம் இருமுறையாக செவ்வாய் மற்றும் வியாழனில் இயக்கப்பட உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications