தேசிய பயங்கரவாத தடுப்பு மைய திட்டத்தை நிறுத்த வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த திட்டதை தற்போது நிறுத்தி வைக்க வேண்டும். இந்த திட்டம் இப்போது தேவையா அல்லது தேவையற்றதா என்று விவாதிக்க தனியாக முதல்வர்கள் மாநாடு கூட்டப்பட வேண்டும்.
முதல்வர்கள் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு பிறகே தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை தற்போதைய நிலையில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தனது கடிதத்தில் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications