பக்தர்களின் பாசமான 'கவனிப்பால்' 4,140 கிலோவான சஙகரன்கோவில் யானை கோமதி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் யானை கோமதியின் எடை 4,140 கிலோ என்று தெரிய வந்துள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் யானை கோமதி. இந்த யானை திருவிழா காலங்களில் ரதவீதி உலா செல்வதுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்று்ம் சிறுவர்களை மகிழ்வித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆளாளுக்கு வாழைப்பழங்களை அள்ளி வழங்கி பாசத்தைக் கொட்டிக் கொடுத்து வருவதால் சமீபகாலமாக கோமதியின் எடை அதிகரித்து வந்தது. இதனால் மாதந்தோறும் யானை கோமதியை கணினி இயந்திரம் மூலம் எடை பார்த்து வருகின்றனர்.
கோமதி குறைந்த பட்சம் 3.5 டன் எடை இருக்க வேண்டும். ஆனால் கடந்த மாதம் எடை பார்த்தபோது 4,400 கிலோ இருந்தது. அதாவது ஓவர் வெயிட்டாகி விட்டது. இதனால் வெயிட் பிட்னஸுக்காக தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் கோமதிக்கு வழங்கப்படும் வாழைப்பழங்களின் அளவினை யானை பாகன் குறைக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று (2ம் தேதி) அதிகாலை ராஜபாளையம் சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரில் உள்ள கணினி இயந்திரத்தின் மூலம் எடை பார்க்கப்பட்டதில் யானையின் எடை 260 கிலோ குறைந்து 4,140 கிலோவாக இருந்தது.
இப்படியே மெயின்டெய்ன் செய்து வந்தால் இன்னும் சற்று எடை குறையும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாம் பாகனுக்கு.












Click it and Unblock the Notifications