ராமஜெயத்தை கடைசியாகப் பார்த்த பால்காரர், ரிடையர்ட் ஜட்ஜ்

Subscribe to Oneindia Tamil

Ramajayam
திருச்சி: கடத்திக் கொல்லப்பட்ட ராமஜெயத்தை சம்பவம் நடந்த அன்று அதிகாலை பால்காரர் ஒருவரும், ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் பார்த்துள்ளனர்.

திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமஜெயம் கடந்த 29ம் தேதி காலை வாக்கிங் போனபோது கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்தனர்.

ராமஜெயம் தான் நேருவின் பல பணிகளை முன்னின்று பார்த்து வந்தார். இதனால் நேருவின் அரசியல் எதிரிகள், ராமஜெயத்திற்கும் எதிரிகளாக இருந்து வந்தனர். எனவே நேருவின் அரசியல் எதிரிகளால் ராமஜெயம் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் இருந்து வந்தது.

பின்னர் இது ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட்காரர்கள் ஒன்று சேர்ந்து கூலிப்படையினரை வைத்துக் கொலை செய்திருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அதுவும் பின்னர் மறைந்து தற்போது பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக புதிய தகவல் பரவ ஆரம்பித்துள்ளது.

முன்னதாக முதல் நாள் இரவே ராமஜெயத்தை கடத்தி அதிகாலை 3 மணிக்கு அவர் கொலல்ப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் கடந்த 29ம் தேதி காலை வாக்கிங் போனபோது தான் கடத்திக் கொல்லப்பட்டார் என்பதை போலீசார் தற்போது உறுதி செய்துள்ளனர்.

அதிகாலை 5.15 மணியளவில் ராமஜெயத்தை ரயில் நிலைய ரோட்டில் பார்த்ததாக டீக்கடைக்காரர் ஒருவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்றும் வியாபாரி ஒருவரும், தினமும் வாக்கிங் போகும் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் சம்பவம் நடந்த அன்று காலை ராமஜெயத்தை பார்ததாக போலீசில் தெரிவித்துள்ளனர்.

அந்த பால் வியாபாரி காலையில் வாக்கிங் போகும் ராமஜெயத்தை தினமும் பார்த்து வணக்கம் சொல்லும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்றும் அவர் வணக்கம் சொல்லியிருக்கிறார். காலை வாக்கிங் போனவரை கோட்டை ஸ்டேசன் ரோட்டில் வைத்தோ அல்லது வேறு இடத்தில் வைத்தோ தலையின் பின்புறம் தாக்கி மயங்கச் செய்து கூலிப்படையினர் காரில் கடத்தி கொன்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொலை குறித்து ராமஜெயத்தின் மனைவி, குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என சுமார் 100 பேரிடம் தனிப்டை விசாரணை நடத்தியுள்ளது. அதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ராமஜெயத்தின் உடல் கிடந்த இடத்திற்கும், கூலிப்படை சென்ற கும்பகோணத்தான் சாலை, திருவாளர்சோலை பகுதிக்கும் இன்று மீண்டும் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. போலீசார் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+