லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது விபரீதம்- லாரி ஓட்டுநர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: லெவல் கிராசிங்கை கடந்த லாரி மீது ரயில் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதமாபமாக உயிரிழந்தார்.
புனேயிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. இந்த ரயில் நேற்று பிற்பகல் 2.22 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி- திருப்புவனம் இடையே வேலாங்குளம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயில் வருவதை கவனிக்காமல் ஆளில்லாத லெவல் கிராசிங்கை ஒரு லாரி கடக்க முயன்றது.
வேகமாக வந்த ரயில் லாரியை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் லாரியின் பாகங்கள் நான்குபுறமும் திசையிலும் சிதறி விழுந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மாதையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications