ராமஜெயம் கொலை: முட்டை ரவி கூட்டாளி சாமி ரவியைத் தூக்கியது போலீஸ்-துருவித் துருவி விசாரணை!

ராமஜெயம் படுகொலை பெரும் மர்மக் கதையாக நீடித்து வருகிறது. யார் கொன்றது என்பது தெரியவில்லை, என்ன காரணம் என்று புரியவில்லை, எப்படி நடந்தது என்றும் தெளிவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், சாமி ரவி என்ற ஒரு ரவுடியை திருச்சி போலீஸார் திண்டுக்கல்லிலிருந்து தூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சாமி ரவி குறித்து பரபரப்பாக கூறுகிறார்கள்..
யார் இந்த சாமி ரவி?
சாமி ரவிக்கு 35 வயதாகிறது. பயங்கரமான ரவுடியாம். மதுரைதான் சாமி ரவிக்கு சொந்த ஊர். ஆனால் வசித்து வருவது திருச்சியில். அடிக்கடி வீட்டை மாற்றி விடுவான். திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டனம் என ஏகப்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ரவுடிக் கும்பல்களுடன் இவருக்கு நல்ல லிங்க் உள்ளதாம்.
எங்காவது யாரையாவது போட்டுத் தள்ள வேண்டும், ஆளை தூக்க வேண்டும், கட்டப் பஞ்சாயத்துக்கு ஆள் வேண்டும் என்று யாராவது ஆர்டர் கொடுத்தால் ஆட்களைத் தயார் செய்து சப்ளை செய்வது இவனது மெயின் தொழில்.
போலீஸாரால் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்ட பயங்கர தாதா முட்டை ரவியின் நெருங்கிய கூட்டாளிதான் சாமி. இவனுக்குத் தெரியாத ரவுடிகளோ கூலிப்படையினரோ இல்லை என்று கூறுகிறார்கள்.
ராமஜெயம் கொலையில் தொடர்பா..?
இப்போது இவனைப் போலீஸார் பிடித்துள்ளதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இவனிடம் விசாரணை நடத்தினால் ராமஜெயத்தைக் கொலை செய்த கும்பல் குறித்து ஏதாவது ஒரு துப்பு கிடைக்கலாம் என்பதால்தானாம்.
ரகசிய இடத்திற்குக் கூட்டிச் சென்று சாமி ரவியை துருவித் துருவி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனராம். தென் மாவட்ட கூலிப்படையினர்தான் கொலையைச் செய்திருக்கிறார்கள் என்று போலீஸார் உறுதியாக நம்புகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் என்பதால் நிச்சயம் சாமி ரவிக்கு ஏதாவது தகவல் தெரிந்திருக்கும் என்று போலீஸார் நம்புகின்றனர்.
இதனால்தான் சாமி ரவியை தூக்கி வந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் செய்தி கசிய விடப்பட்டுள்ளது. சாமி ரவி எதையாவது கக்குவானா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications