கேரளாவுக்கு கடத்த முயன்ற வெள்ளை கிரானைட் கற்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
அவினாசி:கேரளாவிற்கு கடத்த முயன்ற வெள்ளை கிரானைட் கற்கள் ஏற்றிய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் அவினாசி அருகே ஆட்டையாம்பாளையம் பிரிவில் நெடுஞ்சாலை பிரிவு ரோந்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அந்த வழியே வெள்ளை கற்கள் ஏற்றி வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து அவர்கள் சோதனையிட்டனர்.
அதில், பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு அரசு அனுமதியின்றி வெள்ளை கிரானைட் கற்கள் கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. லாரியையும். அதில் இருந்த வெள்ளை கிரானைட் கற்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ 10 லட்சம் என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பாக கோட்டயம் வழியரம்பிலை சேர்ந்த விஜயன் மற்றும் மானூரை சேர்ந்த அனிமோன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications