விளையாட யாரும் வராததால், தானே களமிறங்கி ஆடிய கலெக்டர் சம்பத்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க பலரும் வராத காரணத்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடைபெற்றது. 32 வகையான போட்டிகளை மாவட்ட கலெக்டர் சம்பத் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் விளையாட்டு போட்டியை துவககி வைக்க மாவட்ட கலெக்டர் சம்பத் வந்தார்.

அப்போது, அங்கு, 32 வகையான போட்டிகளுக்கு 6 பெண்கள் உட்பட 38 பேர் மட்டுமே மைதானத்தில் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க 70 கோப்பைகள் தயாராக இருந்தது. இதைக் கண்டு கலெக்டர் சம்பத் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து போட்டியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தானே இறங்கிப் போட்டியிட்டார். இதில், சம்பத் 4 வது இடத்தை பிடித்தார்.

அதே போல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுபோத் குமார் 2 வது இடத்தை பிடித்தார். பெரும்பாலான போட்டியில் ஒருவர் மற்றும் 2 பேர் மட்டும் பங்கேற்றனர். இதனால் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

மீதமிருந்த கோப்பைகள் பத்திரமாக அரசு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+