கடவுள் நம்பிக்கை குறைந்த தொழில்நுட்ப உலகம் அச்சுறுத்தலானது: போப் கவலை
Subscribe to Oneindia Tamil
வாடிகன் சிட்டி: கடவுள் நம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறிகள் இல்லாத தொழில்நுட்பம் உலகத்துக்கு ஆபத்தானது என்று ஈஸ்டர் உரையில் போப் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
இயேசு உயிர்த்தெழுந்து வந்த ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வாடிகன் செயின்ட் பீட்டர் பசிலிகாவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் போப் பெனடிக்ட் சிறப்பு திருப்பலி நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
எது நல்லது எது தீயது என்று தெரியாமல் இருக்கிறோம். இருட்டுக்கும் ஒளிக்கும் உள்ள வித்தியாசம், கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்.
இன்றைய உலகில் கடவுள் பற்றிய விழிப்புணர்வு, உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறைந்து வருகிறது.
இந்த விழிப்புணர்வு இல்லாத தொழில்நுட்பம் உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications