ரத்தக்காட்டேரியைக் காட்டினால் ரூ.1 லட்சம் பரிசு: திராவிடர் கழகம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் மாலை நேர்ததி்ல ரத்தக்காட்டேரி உலா வருவதாக கூறி அக்கிராம மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தின் குண்டலப்பட்டி, மொட்டங்குறிச்சி கிராமங்களில் மாலை நேரத்தில் ரத்தக்காட்டேரி உலா வருவதாகக் கூறி எவரும் வெளியே நடமாடுவதில்லை.

தங்களது கால்நடைகள் கடந்த சில வாரங்களாக மர்மமாக இறந்துபோக ரத்தக்காட்டேரி தான் அதற்கு காரணம் என்று குண்டலப்பட்டி, மொட்டங்குறிச்சிவாசிகள் கருதுகின்றனர்.

இதனால் மாலை 6 மணியாகிவிட்டாலே இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் வெளியே நடமாடுவதில்லை. மேலும் வீடுகளின் முன்பு நாமம் போட்டும் வைத்திருக்கின்றனர். நாமம் போட்டால் ரத்தக்காட்டேரி தாக்காதாம்.

ரூ1 லட்சம் சவால்

ரத்தக்காட்டேரியை நம்புகிற தர்மபுரி மாவட்ட கிராம மக்களுக்கு திராவிடர் கழகம் சவால் விடுத்துள்ளது. எவரேனும் ரத்தக்காட்டேரி இருப்பதாக நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று திராவிடர் கழக நிர்வாகி ஜெயராமன் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+