யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களுக்குள் புகுந்து சிங்களர்கள் தாக்குதல்: தேர்கள் சேதம்

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து கோவில்களுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சிங்களர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததில் இருந்து இலங்கையில் வாழும் தமிழர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தபோதிலும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

கடந்த வாரம் மட்டக்களப்பில் உள்ள இந்தியாவின் தேசப்பிதாவான மகாத்மா காந்தி மற்றும் 2 தமிழ் அறிஞர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. முன்னதாக தமிழர்கள் அதிகம் செல்லும் சிவன் கோவிலுக்குள் புகுந்த சிங்கள ராணுவம் அங்குள்ள புத்தர் சிலையைக் கேட்டு ரகளையில் ஈடுபட்டது. மேலும் சாமி கும்பிட வந்த தமிழ் பக்தர்களை அடித்து விரட்டியது.

யாழ்ப்பாணம் பகுதியில் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள கோப்பாய், பிரான் பற்று பிரதேசத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குள் புகுந்த சிங்களர்கள் அங்கிருந்த 2 சுவாமி வாகனங்களை சேதப்படுத்தினர்.

இதேபோன்று அச்செழு பகுதியில் உள்ள இந்து கோவிலுக்குள்ளும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சாமி வாகனங்களை சேதப்படுத்தினர்.

பட்டப்பகலில் நடந்த இந்த அத்துமீறல் குறித்து புகார் கொடுத்தும் பலனில்லை. போலீசார் வழக்குப் பதியவும் செய்யவில்லை. அண்மை காலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதோடு சாமி சிலைகள் திருடுபோவதாக அப்பகுதி இந்துக்கள் கவலை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+