ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை பற்றி சிதம்பரம் நேரில் ஆய்வு
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஜம்முவுக்கு வந்து சேர்ந்த ப.சிதம்பரத்தை துணை முதல்வர் தாராசந்த் வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வைஷ்ணவிதேவி கோயில் அமைந்திருக்கும் மலைப்பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நடந்து சென்று கோவிலில் வழிபட்டார். அவருடன் ஆளுநர் வோராவும் சென்றிருந்தார்.
வைஷ்ணவிதேவி கோயிலிலிருந்து திரும்பிய ப.சிதம்பரம் மாநில அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார்.
ஜூன் மாதம் 25-ந் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கப்படும் நிலையில் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ப.சிதம்பரம் கேட்டறிந்தார். மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தி வருகிறார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இத்தகைய சட்டம் தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications