சவூதியில் 18 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்பு: விரைவில் ஊர் திரும்புகிறார்
துபாய்: கடந்த 18 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்கப்பட்டார். அவர் விரைவில் சொந்த ஊர் திரும்பவிருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பி.பெரியசாமி (45). அவர் திருமணம் முடிந்து ஓராண்டான நிலையில் தனது 27வயதில் கடந்த 1994ம் ஆண்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவர் ஹெயில் என்ற பகுதியில் ஒட்டகம் மேய்த்து வந்தார். அவருக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தவர் அதாவது ஸ்பான்சர் அவருக்கு சம்பளத்தை கொடுக்காமல், அவரை சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்காமல் இருந்துள்ளார்.
வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் சவூதிக்கு வந்து இப்படி சிக்கிக் கொண்டோமே என்று மனமுடைந்த பெரியசாமி வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக அவர் கடந்த 18 ஆண்டுகளாக குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் படும் துயரத்தைப் பற்றி அறிந்த சவூதி குடிமகன் ஒருவர் இது குறித்து போலீஸ் மற்றும் ஆளுநரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பெரியசாமியின் ஸ்பான்சர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் 18 ஆண்டுகளாக சி்க்கித் தவித்த பெரியசாமியை மீட்டு அல் ஷாம்லி போலீசாரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெரியசாமியின் சம்பளபாக்கியை மொத்தமாக கொடுப்பதோடு அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்குமாறு அநத ஸ்பான்சருக்கு உத்தரவிட்டது. பெரியசாமியின் சம்பளபாக்கியை பெற்றுத்தருமாறும், அவரை விரைவில் ஊருக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அல் ஷாம்லி போலீசாருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பெரியசாமியிடம் பயணம் செய்யத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அங்குள்ள இந்திய தூதரகம் அவருக்கு அவுட்பாஸ் கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் சொந்த ஊருக்கு திரும்பவிருக்கிறார். இதற்கிடையே அவரது குடும்பத்தாரை கண்டுபிடிக்க தூதரகம் முயற்சி செய்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications