24ல் ஹரியானா அமைச்சர் மகனை கைபிடிக்கும் லாலுவின் 5வது மகள்
பாட்னா: ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் 5வது மகள் அனுஷ்காவுக்கும், ஹரியானா மாநில மின்சாரத்துறை அமைச்சர் அஜய் சிங் யாதவின் மகன் சிரஞ்சீவ் ராவுக்கும் வரும் 24ம் தேதி திருமணம் நடக்கிறது.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அதில் 5வது மகள் அனுஷ்காவுக்கும், ஹரியானா மாநில மின்சாரத்துறை அமைச்சர் அஜய் சிங் யாதவின் மகன் சிரஞ்சீவ் ராவுக்கும் வரும் 24ம் தேதி திருமணம் நடக்கிறது.
திருமண சடங்குகள் வரும் 18ம் தேதி முதல் நடக்கின்றன. திருமணத்தையொட்டி தெற்கு ஹரியானாவில் உள்ள அஜய் சிங்கின் சொந்த ஊரான ரேவாரியில் இருந்து டெல்லிக்கு திருமண ஊர்வலம் நடக்கிறது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
அஜய் சிங் ரேவாரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது மகன் சிரஞ்சீவ் ஹரியானா மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
லாலுவின் 4வது மகள் ராகினிக்கும் சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த காசியாபாத் எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகன் ராகுலுக்கும் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications