4 மாதத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் டேவிதார் டிரான்ஸ்பர்!-மீண்டும் கார்த்திகேயன்
சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பி.டபுள்யூ.சி.டேவிதார் திடீரென்று மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக டி.கார்த்திகேயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு அந்த இடத்தில் டி.கார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நியமிக்கப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு மேயர் தேர்தல், இவர் காலத்தில் தான் நடந்தது.
இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவர் சிவில் சப்ளைஸ் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக டேவிதார் நியமிக்கப்பட்டார்.
கடந்த 4 மாதங்கள் மட்டுமே இந்தப் பதவியில் டேவிதார் பணியாற்றிய நிலையில் திடீரென்று அவர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது தமிழக அரசு.












Click it and Unblock the Notifications