தமிழகத்தில் கடும் கடல் சீற்றம்-மக்கள் வெளியேற்றம்: தமிழக கடலோரம் ஸ்தம்பிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவிலான மிகப் பயங்கரமான பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடலூர், புதுச்சேரி கடலோரப் பகுதிகளை மாலை 4.30 மணிக்கும், சென்னையை மாலை 5 மணிக்கும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று கூறப்பட்டது. அதேபோல அந்தமான், நிக்கோபார் தீவுகளையும் 4 மணியளவில் சுனாமி அலைகள் தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்த எதிர்பார்ப்பு காரணமாக தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டிருந்தன. கடலோரப் பகுதிகளில் வசித்து வருவோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வந்தனர்.
சென்னை மெரீனா கடற்கரை வெறிச்சோடிப் போனது. கடற்கரைக்கு காற்று வாங்க வந்தோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், இப்பகுதிகளில் உள்ள மீனவர் குடியிருப்புகள், வீடுகளில் குடியிருப்போர், திருவான்மியூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதகிளிலும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடற்கரை முழுவதிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல கடலூர், நாகப்பட்டனம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடும் கடல் சீற்றம்
இதற்கிடையே, கடலோரங்களில் பல இடங்களில் கடல் சீற்றம் கடுமையாக இருந்தது. ராமநாதபுரத்தில் ராட்சத அலைகள் எழுந்து வந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்து ஓடினர்.
கடலோரத் தமிழகம் முழுவதும் போலீஸாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு மீட்புப் படையினரும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைகள் அடைப்பு
சென்னையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் அடுத்து லைட்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் அருகில் உள்ள கோல விழியம்மன் கோவிலில் தஞ்சமடைந்தனர். கடற்கரை சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications