படவேடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு ரகசிய விசிட் அடித்த சசிகலா

Subscribe to Oneindia Tamil

Sasikala
திருவண்ணாமலை:அக்கா ஜெயலலிதாவுடன் சேர்ந்த பிறகு கோயில் கோயிலாக ஏறி இறங்கும் சசிகலா இன்று காலை 9.20 மணி அளவில் படவேட்டில் உள்ள ரேணுகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், வேண்டியவர்களை கட்சியில் இருந்து நீக்கினார். பல ஆண்டுகளாக தன்னுடன் போயஸ் கார்டனில் வசித்து வந்த சசிகலாவை அங்கிருந்து வெளியேற்றினார். இதை அதிமுகவினர் லட்டு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு அவரது கணவர், உறவினர்கள் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தனக்கு உறவினர்களே வேண்டாம், அக்கா ஜெயலலிதா தான் வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து 103 நாட்களாக பிரிந்திருந்த தோழிகள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கே திரும்பினார்.

அக்காவுடன் சேர்நத் அவர் கோயில், கோயிலாக சென்று இறைவனுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று காலை 9.20 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் திருக்கோயிலுக்கு சென்றார். அவர் வருகை குறித்து கோயில் அதிகாரிகள் மற்றும் அய்யர்களுக்கு ஏற்கனவே ரகசியமாக தகவல் தெரிவி்த்துள்ளனர்.

சசிகலா சாமி கும்பிட்டுவிட்டு உடனே அங்கிருந்து காரில் சென்னைக்கு கிளம்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+