தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது!
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளிலும் உட்புறப் பகுதிளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் பீதி காணப்பட்டது.
இந்தோனேசியாவில் இன்று 8.9 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையின் கடலோரப் பகுதிகள் அனைத்திலும் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. இந்தப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீடுகள் அதிர்ந்தன. வாகனங்கள் ஆடின. இதனால் மக்கள் வெளியேறினர்.
டைடல் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்துள்ளன. அதேபோல கோடியக்கரை, தரங்கம்பாடி உள்பட பல கடலோரப் பகுதிகளிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் பல கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேபோல திருச்சி உள்ளிட்ட உட்புற மாவட்டங்களிலும், ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications