தென் சீனக்கடலுக்கு வரக்கூடாதுன்னா, வரக்கூடாதுதான்... இந்தியாவிடம் சீனா!
பீஜிங்: தென் சீனக் கடல் பகுதி அனைவருக்கும் பொதுவானது என்ற இந்தியாவின் கருத்துக்கு சீனா எதிப்பு தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பரப்பில் எண்ணெய் வளமிக்க பல்வேறு தீவுகள் உள்ளன. இவை அனைத்துக்குமே சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால் புருனே,வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறி வருகின்றன.
தென்கிழக்கு ஆசிய பகுதியில் தென்சீனக் கடல் விவகாரம் சர்ச்சைக்குரியதாக வெடித்து வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன அரசின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸில் கூறியிருப்பதாவது,
தென் சீனக் கடல் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்துள்ளது தவறு. சர்ச்சைக்குரிய அந்த கடல் பகுதியில் சட்டப்படி பயணம் செய்யும் உரிமையும், வர்த்தகம் செய்யும் உரிமையும் பிற நாடுகளுக்கு உள்ளது.
அதற்கு சீனா ஒரு நாளும் ஆட்சேபனை தெரிவித்தது இல்லை. ஆனால் அந்த உரிமைகள் சீனாவின் இறையாண்மை உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications