நில அபகரிப்பு.. தனி போலீஸ் பிரிவு அரசாணையை ரத்து செயய்க் கோரி நடராஜன் மனு!
சென்னை: நில அபகரிப்பு குறித்து விசாரிப்பதற்காக தனி போலீஸ் பிரிவை உருவாக்கி அறிவிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சசிகலாவின் கணவர் நடராஜன் தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நில மோசடி வழக்குகளில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக தனி போலீஸ் பிரிவை உருவாக்கி 28.7.11 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. என் மீது நில மோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை தனிப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். என் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து எனது அடிப்படை உரிமைகளை போலீசார் மீறுகின்றனர். உள்நோக்கத்துடன் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
எனவே, அந்த அரசாணை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications