சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மீறினால் ரூ.5,000 அபராதம்

Subscribe to Oneindia Tamil

Plastic Bag
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. தடையை மீறி பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சங்கரன்கோவி்ல் நகராட்சி பகுதியில் 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுளளது. எனவே நகராட்சி பகுதியில் உள்ள டீ கடைகள், உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும், அதற்கு பதிலாக துணிப் பைகளையும், கூடைகளையும் பயன்படுத்துமாறும், டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக காகித கப்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் பொது மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+