மும்பையில் பீகார் தினம் கொண்டாடும் விவகாரம்: நிதிஷூக்கு லாலு கட்சி அதிரடி ஆதரவு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. ராம்கிர்பல் யாதவ் கூறியுள்ளதாவது:
மும்பையில் பீகார் தினத்தைக் கொண்டாடும் நிதிஷின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். நமது நாடு கூட்டாட்சி அரசாங்கத்தைக் கொண்டது. யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம். மும்பை என்பது ராஜ்தாக்கேரயின் சொந்த நாடு அல்ல.
மும்பையில் கட்டுமானப் பணியில் பல்லாயிரக்கணக்கான பீகாரிகள் பணிபுரிகின்றனர். மஹாராஷ்டிராவுக்காக ராஜ்தாக்கரேயின் பங்களிப்பைவிட பீகாரிகளின் பங்களிப்பு மிகவும் அதிகமானது என்றார்.
இதேபோல் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. சமர்த் செளத்ரியும், மும்பையில் நடைபெறும் பீகார் தின விழாவில் நிதிஷ்குமார் கலந்து கொண்டு ராஜ்தாக்கரேயின் நடவடிக்கைகள் தவறானவை என நிரூபிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications