இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது-பிரதமர்

டெல்லியில் இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்
மத்திய அரசும், மாநில அரசுகளும் உள்நாட்டுப் பாதுகாப்பில் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற வேண்டும். நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமை திருப்திகரமாகவே உள்ளது. இருப்பினும் இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்சல் வன்முறை ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நாம் இன்னும் நெடுந்தொலைவு போக வேண்டியுள்ளது. மக்களின் போர் என்ற பெயரில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்தி வரும் தாக்குதல்களால் உள்ளூர் மக்கள்தான் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். தகவல் தொடர்பு சாதனங்களைத் துண்டிப்பதாலும், தகர்ப்பதாலும், வெளிநாட்டினரைக் கடத்துவதாலும் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் குறித்து முதல்வர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தப்படும். அதில் எந்த மாநில முதல்வருக்கும் துளியும் சந்தேகம் தேவையில்லை. தீவிரவாதத்தை எதிர்த்து நிற்பதில், போரிடுவதில் மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன. இது பாராட்டுக்குரியது.
வட கிழக்கு மாநிலங்களில் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதற்கான திட்டங்கள் அமலாக்கப்படும்போது, அந்தப் பகுதிகளில் இயல்பு நிலை சாத்தியமாகும். வட கிழக்கு மாநிலங்களில் உள்ள நிலைமை சற்றே சிக்கலானது. வளர்ச்சிகாக ஒதுக்கப்படும் நிதியை தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடப் பயன்படுத்த வேண்டிய நிலை துரதிர்ஷ்டவசமானது என்றார் பிரதமர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications