மக்கள் நலனுக்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒரு நாள் மட்டுமே ஸ்டிரைக்
நாமக்கல்: பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் ஒரு நாள் வேலைநிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் நல்லதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கொடுத்து வருகின்ற குறைந்தபட்ச டீலர் கமிஷன் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் அகில இந்திய அளவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில், இந்த போராட்டத்தை வரும் 22ம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கி 23ம் தேதி நள்ளிரவு வரை ஒருநாள் மட்டும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications