கமுதி அருகே வேலைக்கு சென்ற நர்ஸ் மாயம்: ஆட்டோ டிரைவருக்கு வலை

Subscribe to Oneindia Tamil

கமுதி: கமுதி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த நர்சுடன் மாயமான ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் போலீஸ் சரகம் விரதக்குளத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்திகைச்சாமியின் மகள் சங்கீதா(19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள அவர் அபிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலைக்குப் போன சங்கீதா திடீர் என்று மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

சங்கீதா கிடைக்காததால் அவரது தந்தை கார்த்திகைச்சாமி போலீசில் புகார் கொடுத்தார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

வேலைக்கு சென்ற எனது மகள் சங்கீதாவை அபிராமம் அருகே உள்ள விக்கிரஉடைப்பைச் சேர்ந்த முனியசாமி மகன் ஆட்டோ டிரைவர் அண்ணாத்துரை(21) என்பவர் தனது உறவினர் பாண்டி(35) என்பவரின் உதவியோடு 50 பவுன் நகை மற்றும் ரூ.30,000 பணத்துடன் கடத்திச் சென்றுவிட்டார். எனவே, எனது மகளைக் கண்டடுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மதியழகன், எஸ்.ஐ. லட்சுமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சங்கீதாவையும், அண்ணாத்துரையையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+