ஜெய்ராம் ரமேஷுக்கு ராகுல் காந்தி திடீர் 'சம்மன்'!
டெல்லி: காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் வரப் போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷை ஆலோசனைக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தொடர் தோல்விகளின் நாயகனுமான ராகுல் காந்தி.
2014ல் லோக்சபாவுக்குத் தேர்தல் வரப் போகிறது. அதற்கு முன்பாக கட்சியை சரி செய்ய சோனியா காந்தி நினைக்கிறார். இதற்காக அமைச்சர்கள் சிலரை கட்சிப் பணியில் ஈடுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சல்மான் குர்ஷித், குலாம் நபி ஆசாத், வயலார் ரவி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இன்னொரு மூத்த அமைச்சரான ஜெயராம் ரமேஷை தன்னை வந்து பார்க்குமாறு ராகுல் காந்தி அழைத்துள்ளாராம். சமீப காலமாக கட்சியின் திட்டமிடல் வேலைகளை ராகுல்காந்திதான் முன்னின்று பார்த்து வருகிறார். எனவே ரமேஷை அவர் அழைத்துள்ளது பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
ஜெயராம் ரமேஷ் தற்போது ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராக உள்ளார். அவரும் ராஜினாமா கடிதம் கொடுத்தவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. எனவே ரமேஷுக்கு கட்சியில் முக்கியப் பதவியை கொடுக்க ராகுல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications