கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பியாக்க காங். முடிவு

சச்சின் டெண்டுல்கர் (39), சர்வதேச கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். நேற்றுமுன்தினம் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடிய சச்சின், கடந்த 23 ஆண்டுகளாக நாட்டிற்காக கிரிக்கெட் ஆடி வருகிறார்.
கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே ஆடி வந்த சச்சினை, அரசியலில் களமிறக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சச்சினை நேரடியாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தார்.
சோனியாவின் அழைப்பை ஏற்று கொண்ட சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன், ஜன்பாத் இல்லத்தில் சோனியா காந்தியை நேரடியாக சந்தித்து பேசினார். சுமார் அரை மணிநேரம் தொடர்ந்த இந்த சந்திப்பின் போது, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் உடன் இருந்தார்.
சந்திப்பின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதத்தை கடந்த சச்சினின் சாதனையை சோனியா பாராட்டியுள்ளார். மேலும் வருங்காலத்தில் கிரிக்கெட்டில் சச்சின் பல சாதனைகளை புரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புகழ் உச்சியில் உள்ள சச்சினை, ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்க காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்து வலை வீசியுள்ளது. ஆனால் இதற்கு சச்சின் தரப்பின் என்ன பதில் தெரிவிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications