தைரியம் இருந்தா, ரயிலில் எலி, மூட்டைப் பூச்சியை சமாளித்து பயணியுங்கள் பார்ப்போம்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ரயில் பயணம் சமீப காலமாக அவஸ்தை பயணமாக மாறி வருகிறது. ரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கு காரணமாக கழிப்பறையிலிருந்து துர்நாற்றம் மற்றும் எலி, மூட்டைப்பூச்சி தொல்லையால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

ரயில் பயணம் பாதுகாப்பு மற்றும் வசதி என்பதால் அதில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ரயில் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படு்ம் ரயில் பெட்டிகளில் பெரும்பாலானவை சுகாதாரம் அற்றவையாக இருக்கிறது. கழிவறையை சரிவர சுத்தம் செய்யாததால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் முக்ம் சுளிக்கின்றனர். அதோடு தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

இது தவிர எலி, மூட்டைப்பூச்சிகள் சர்வ சாதாரணமாக ரயில் பெட்டிகளில் குடும்பத்துடன் குடி இருக்கின்றன. இவை இரவுகளில் பயணிகளை பாடாய் படுத்துகிறது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிம்மதியாக பயணம் செய்யலாம் என்று நினைத்து ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+