ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு: நெல்லை கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள 2 கிமீ பகுதியில் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவு வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நெல்லை கலகெடர் செல்வராஜ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கிமீ பகுதியில் 144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இந்த சட்டம் அமலில் இருக்கும் காலத்திலேயே அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

எனவே வேறுவிதமான சம்பவங்கள், எந்தவிதமான கலவரங்களும் ஏற்படாமல் பொது அமைதியை பாதுகாக்க ஏதுவாக அணு மின் நிலையத்துக்கு எதிரான கருத்துள்ளவர்கள், கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு உதவி செய்பவர்கள், அவர்களை தூண்டி விடும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் வரும் மே 31ம் தேதி மாலை 6 மணி வரை ராதாபுரம் தாலுகா, கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கிமீ பகுதிக்குள் நுழையக் கூடாது என்றார்.

ஒரு புறம் 144 தடை உத்தரவு அமலில் இருக்க மறுபுறம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தியைத் துவங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+