சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அரசு வக்கீல் ஆதரவு : புதுவை நீதிமன்றத்தில் புகார்
புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் தேவதாஸ் செயல்படுவதால் அவரை நீக்க வேண்டும் என்று சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமியுடன் பேரம் பேசியதாக வெளியான டேப் முதலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கிய நிலையில் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று சங்கரராமன் மனைவி பத்மா புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் வரையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார் பத்மா. இதனை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரியில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் பத்மா மற்றும் அவரது மகன் ஆனந்த் சர்மாவுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா இன்று ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பிறழ் சாட்சியங்களான 83 பேரிடம் எந்தவித குற்றுக்குவிசாரணையும் தேவதாஸ் நடத்தவில்லை என்றும் அதனால் அரசு வழக்கறிஞரை இந்த வழக்கில் நீக்கிவிட்டு வேறு ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் அதில் ஆனந்த் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications