தெஹல்காவின் போலி ராணுவ பேர ஊழல் வழக்கு: பங்காரு லஷ்மணுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை!

2001-ம் ஆண்டு பங்காரு லஷ்மண், பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை அணுகிய தெஹல்கா ஊடக குழுவினர் தங்களது இங்கிலாந்தின் ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகளாகக் கூறிக் கொண்டனர். இந்திய ராணுவத்துக்கு தளவடாங்களை தங்கள் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி ரூ1 லட்சத்தை லஞ்சமாகக் கொடுத்தனர். இதனை பங்காரு லஷ்மண் பெற்றுக் கொள்ளுவதையும் அவருடன் பேசிய உரையாடல்களையும் பதிவு செய்து அம்பலப்படுத்தியது தெஹல்கா.
இதைத் தொடர்ந்து பங்காரு லஷ்மண் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய டெல்லி சிறப்பு நீதிமன்றம் பங்காரு லஷ்மணை குற்றவாளி என்று அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றே கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பங்காரு லஷ்மண். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் பொதுவாழ்வில் தூய்மையானவர் என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. சி.பி.ஐ. தரப்பிலோ அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிற்பகல் 2.30க்கு தீர்ப்பு வழங்குவதாகக் கூறியிருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி பங்காரு லஷ்மணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பங்காரு லஷ்மணுக்கு ரூ1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக பங்காரு லஷ்மண் தரப்பு தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications