ஊதிய பாக்கி கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் கிங்பிஷர் ஊழியர்கள் வழக்கு தொடர முடிவு
Subscribe to Oneindia Tamil

கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம். கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பது ஊழியர்களின் புகார்.
இதைத் தொடர்ந்து விமான நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கான ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளர் நலநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஊதிய பாக்கியை ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் கூட கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானிகளும் பொறியாளர்களும் அந்த நிறுவனத்துக்கு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications