பீ.பி.ஓ. துறையில் அதிக வருவாய் ஈட்டுவதில் இந்தியாவுக்கே முதலிடம்
டெல்லி: பீ.பி.ஓ. எனப்படும் பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும் சேவையில் அதிக வருவாய் ஈட்டி வருவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
2011-12-ஆம் நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பீ.பி.ஓ. சேவை வாயிலாக 1,590 கோடி டாலர் (ரூ.82,680 கோடி) ஈட்டி உள்ளனர். இது, முந்தைய 2010-11-ஆம் நிதி ஆண்டின் வருவாயுடன் (1,420 கோடி டாலர்) ஒப்பிடும்போது 12 விழுக்காடு அதிகமாக உள்ளது.
பீ.பி.ஓ. துறையில் இந்திய நிறுவனங்களால் குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்குகிறது, இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றின் காப்பீடு, மருத்துவம், அறிவுசார் தொழில், சட்டம் போன்ற பல்வேறு சேவைகளை இந்திய நிறுவனங்கள் வாயிலாக நிறைவேற்றி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
மேலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் மந்தநிலை போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு இந்திய ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறை ஓர் உந்துசக்தியாக திகழ்கிறது.
2011-12-ஆம் ஆண்டில் இந்திய ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் 10,000 கோடி டாலராக (ரூ.5.20 லட்சம் கோடி) உயர்ந்து இருக்கும் என நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காடு என்றார் அவர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications